பாரிஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் காரணம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று அதிகாலை தீவிரவாதிகள் 8 குழுக்களாகப் பிரிந்து தாக்குதலை நடத்தினர். உலகை உலுக்கிய இத்தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி ஒலான்டே..
பிரான்ஸ் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் யுத்தத்தை நடத்தியுள்ளனர். வெளிநாட்டில் நன்கு திட்டமிடப்பட்டு உள்நாட்டு ஆதரவுடன் இந்தத் தாக்குதல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்.
2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் பிரான்ஸில் நிகழ்த்தப்பட்ட மிக பயங்கர தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலில் 155 பேர் பலியாகியுள்ளனர். இத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.