வடக்கு மாகாணசபையின் மரநடுகை மாதத்தை முன்னிட்டு, வவுனியா பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் ஓமந்தை சேமமடு வீதியில் அமைந்துள்ள சங்க காணியில் 14.11.2015 அன்று மரங்கள் நாட்டப்பட்டன.
வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, எம்.பி.நடராசா, வவுனியா கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி தபோதினி, வவுனியா கால்நடை வைத்தியர் திருமதி கனகரத்தினம், மேலதிக கால்நடை வைத்தியர் திருமதி காயத்திரி சத்தியலிங்கம், வவுனியா தெற்கு கால்நடை வைத்தியர் திரு.ஆலன், வவுனியா வடக்கு கால்நடை வைத்தியர் திரு.தம்மித்த, பூந்தோட்டம் பண்ணை அத்தியட்சகர் திருமதி சுதாரணி, மற்றும் கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.