வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 17.11.2015 அன்று கந்தசஷ்டி விரத முடிவு சூரசம்காரத்தை முன்னிட்டு மதியம் 1.00 மணியளவில் விநாயகர் வழிபாட்டோடு ஸ்னபன அபிஷேகம்கம் ஆரம்பமாகி வசந்த மண்டபபூசை இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் மலையடிவாரத்தை நோக்கி முருகப்பெருமான் எழுந்தருளி வந்து சூரனை சம்கரிக்கும் போர் இடம்பெற்று மீண்டும் மலை மீது எழுந்தருளி பிராயச்சித்த அபிசேகத்தோடு பூசைகள் நிறைவடைந்தன.
இம்முறை நகர்புறத்திலிருந்து வருகை தந்த மக்களுக்காக மாலை 7.00 மணியளவில் ஆலய பரிபாலன சபையினரால் இலவச பேரூந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் :சிவசங்கர்