வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் நேற்றைய தினம் 18.11.2015 புதன்கிழமை இரவு முருகபெருமானுக்கு வள்ளி தெய்வயானை ஆகியோருடன் திருக்கல்யாணம் இடம்பெற்றது .
சூரசம்காரத்தின் மறுநாள் முருகபெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெறுவது வழக்கமாகும் . நேற்றைய திருக்கல்யாண வைபவத்தின் போது வள்ளி மற்றும் தெய்வயானை ஆகியோர் தனித்தனியே அழைத்து வரப்பட்டு திருகல்யாணம் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வ யானை சமேதராக வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .