சட்டவாரத்தினை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகம், வவுனியா மாவட்ட சட்டத்தரனிகள் சங்கம், தமிழ் விருட்சம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இலவச சட்டக்கருத்தரங்கு இன்று (25.11) காலை வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவருமான மு.சிற்றம்பலம் கலந்து கொண்டு சட்டக்கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்தார்.
சட்டத்தரணிகளான செல்வி சாமிலா அபூபக்கர், திருமதி குணவதி, தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், கிராமசேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சட்ட ஆலோசனைகளும், பிணக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.