வவுனியா சிதம்பரபுரம் மக்களுக்கு வடமாகாண சபையால் உலர் உணவுப்பொதிகள்!!

333

வடமாணசபை விவசாய அமைச்சின் நிதி உதவியில் இருந்து சிதம்பரபுரம் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

அப்பகுதி பொது அமைப்புக்களின் தொலைபேசி அழைப்பின் பிரகாரம் வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களை 22.11.2015அன்று பார்வையிட்டபோது அம் மக்களின் உடனடி தேவையாக உலர் உணவுப் பொருட்கள் தேவைப்பட்டது.

உடனடியாக வவுனியா மாவட்டதில் உள்ள வடமாகாணசபை உருப்பினர்களான G.T.லிங்கநாதன், M.P.நடராஜ், இ.இந்திரராஜா ஆகியோருடன் கலந்துரையாடி விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏனைய அமைச்சர்களுடனும் தொடர்புகொண்டு விபரத்தை தெரியப்படுத்தியதுடன் விவசாய அமைச்சின் நிதி உதவியுடன் சிதம்பரபுரம் கிராமம், சிதம்பரபுரம் முகாம், பளைய கற்குளம் போன்ற மக்களுக்கு 24.11.2015 அன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, இ.இந்திரராசா அவர்களின் செயலாளர், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் அக் கிராமங்களின் பொது அமைப்புக்களின் தலைவர் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

01 IMG_6832 IMG_6847 IMG_6850 IMG_6855 IMG_6872 IMG_6898 IMG_6901 IMG_6903 IMG_6907 IMG_6909 IMG_6911 IMG_6919 IMG_6920 IMG_6921 IMG_6922 IMG_6924 IMG_6950 IMG_6953 IMG_6954 IMG_6958