கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி கோப்பாய் மாணவன் தற்கொலை!!(படங்கள்)

653


0

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதிவிட்டு புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



இந்த சம்பவம் கோண்டாவில் புகையிரதக் கடவையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதோடு குறித்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராஜேஸ்வரன் செந்தூரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதம் முன் பாய்ந்தே குறித்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



  2 3 4 5 6