ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மால்டா நோக்கி பயணம்!!

923

1 (68)24வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் .

இம்முறை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு 23வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் இடம்பெற்றது. இதன்படி பொதுநலவாய நாடுகளின் தற்போதைய தலைவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகும்.

மேலும் நாளை மால்டாவில் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்து இரண்டு வருடங்களுக்கு இப் பதவி அந் நாட்டுப் பிரதமரையே சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.