நுகேகொடையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்துக்கு அருகில் நடமாடும் விபசார வாகனமொன்றை மிரிஹான பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த காரியவசம் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
வாகனத்திலிருந்த 20 வயதான இளம் பெண்ணையும் 27 வயதான நபரையும் கைது செய்துள்ளனர். கைதான பெண் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் ஆண் நுகேகொடையைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப முச்சக்கர வண்டியில் பெண்களை ஏற்றிச் சென்று விடுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.