ஆமீர்கானின் கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு; சிவசேனா அறிவிப்பு!!

319

aamir_khan003இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகக் கருத்துக் கூறிய இந்தி நடிகர் ஆமீர்கானின் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சிவசேனா அறிவித்துள்ளது.

ஆமீர்கானுக்கு எதிராக பாஜக மற்றும் சிவசேனா அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சிவசேனா அமைப்பினர் ஆமீர்கான் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு அமீர் கானை கொச்சையான வார்த்தைகளில் திட்டி, அவரது புகைப்படத்தைக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன், அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.

யார் ஒருவர் ஆமீர் கான் கன்னத்தில் அறைகிறாரோ, அவருக்கு அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆமீர்கான் தங்கியிருக்கும் ஓட்டலில் ஊழியர்கள் கூட, அவரது கன்னத்தில் அடித்துவிட்டு பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அமீர்கானின் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். அவர்களும் இந்தப் பரிசுத் தெகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார் என்று அமீர்கான் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.