பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று!!

264

chogm-2015-maltaபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில் இன்று (27) ஆரம்பமாகிறது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொள்கின்றனர்.

இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவியை வகிக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தலைமைப் பதவியை மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டிற்கு வழங்கவுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மோல்டாவிற்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதவிர பொது நலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாடு நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டிருந்தார். இன்று ஆரம்பமாகும் 24 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.