தந்தையை கொலை செய்த 15 வயது மகன் கைது!!

571

bloody_knifeபதுளை – ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் 39 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.