அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மது விற்பனைக்கு தடை!!

629

no_alcoholஇந்தியாவின் பிஹாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி முதல் மது விற்பனைக்குத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மதுவிற்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டங்களை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மதுவிற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் கிராமங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தங்களது தேர்தல் வாக்குறுதிக்கிணங்க மதுவிலக்கு தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட இன்று (26) அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்த மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட்டார்.

மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை அமைக்க ஆதரவு அளித்தால் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.