வவுனியா அருணோதயா சர்வதேச பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் 5ம் ஆண்டு கலைவிழா இன்று (28.11.2015) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.M.S.றம்சீன் (அதிபர்- வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலை), திரு.N.S.செல்வரட்ணம் (பிரதி அதிபர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.தி.மனோகரரஜா (நிலையப் பொறுப்பு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்), கலாநிதி தமிழ்மணி அகளங்கன், திரு.வாகீசன்(வடக்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்), சிவஸ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் இடம்பெற்றன.
-சுகுமார்-