இன்று 28.11.2015 வவுனியா பிரதேச செயலகத்தில் வவுனியா தமிழ் ஊடகவியாளர்களுக்கான ஊடகக்கருத்தரங்கு வவுனியா அனர்த்த முகாமைத்துவம் ( DMC) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கா.உதயராசா (வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்), ந.சூரியராஜா (அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்) மற்றும் ஊடகவியளாளர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றினர்.
இக் கருத்தரங்கில் ஊடகவியாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் கட்டமைப்புகள் பற்றியும் விளக்கமளித்திருந்தனர். அத்துடன் ஊடகவியளார்களுக்கு குடை ஒன்றை அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் வழங்கி வைத்தார்.