இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட ஜ.தே. கட்சியின் வவுனியா உறுப்பினர்களினால் முச்சக்கர வண்டிகளுக்கு தேசியக்கொடியின் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு இன்று காலை இலுப்பையடி முச்சக்கர வண்டித்தரிப்பிடத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு உப பொலிஸ்மா அதிபர் ஏக்கநாயக்க, வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த விக்கிரமசிங்க, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சன்ன அபேரத்தின, மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், ஜ.தே.கட்சி அமைப்பாளர்கள் ஆதரவானர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.