25 அடி உயரத்தில் இருந்து குதித்த 9 வயது தைரிய சிறுமி!!

297

2424695

உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமி சோபியா தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 3–வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் உக்ரைனில் இருந்து அமெரிக்காவுக்கு இவர்கள் வந்தனர். இந்த நிலையில் அவர்களது வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

உடனே தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீப்பிடித்த பகுதியில் சிறுமி சோபியா, 25 அடி உயர பால்கனியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். அது மிகவும் ஆபத்தான பகுதி எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் அது இருந்தது. எனவே அவளை காப்பாற்ற தீயணைப்பு படையினர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

எனவே, அவளை அங்கிருந்து கீழே குதிக்கும்படி தெரிவித்தனர். உடனே யோசிக்காமல் அவள் 25 அடி உயரத்தில் இருந்து குதித்து விட்டாள். அதிர்ஷ்டவசமாக அவளுக்கு காயம் ஏற்படவில்லை. அவள் குதித்த பகுதியில் பாதுகாப்பு வலை எதுவும் கட்டவில்லை. தொங்குவதற்கு ஏணி எதுவும் இல்லை. இது குறித்து அவளிடம் கேட்ட போது, ´தப்பிக்க வழி எதுவும் இல்லாததால் தைரியமாக குதித்து விட்டேன்´ என்றாள்.