வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் இல்ல திறனாய்வுப் போட்டி!!

347

 
வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் இல்ல திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திரு.சிவராஜா தலைமையில் நேற்று (05.02.2015) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், தியாகராசா, எம்.பி.நடராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.வாகீசன், நெடுங்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.கிருபானந்தன், வடக்கு வலயம் முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் இராஜேஸ்வரன், கனகராயன்குளம் பொலிஸ் அத்தியட்சகர், ஞானம் பவுண்டேசன் வடமாகாண இணைப்பாளர் யோகேஸ், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சமுகத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இங்கு மாணவர்களின் கல்விக்கு பெரும் தடையாக இருக்கின்ற போக்குவரத்து வசதிஇன்மை, பாதைகள் புனரமைப்பு இன்றி காணப்படுகின்றமை, மின்சாரம் வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இவற்றை நிவர்த்திசெய்து மாணவர்களின் சுமுகமான கல்வி நடவடிக்கைகளுக்கு வழியேற்படுத்தி தருமாறும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் வித்தியாலயத்தின் அதிபர் திரு.சிவராஜா கோரிக்கை விடுத்தார்.

DSC00939 DSC00946 DSC00967 DSC00968 DSC00982 DSC00991 DSC01005 DSC01017 DSC01019 DSC01021 DSC01022 DSC01024 DSC01025 DSC01027 DSC01032 DSC01039 DSC01041 DSC01043