கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களுக்கான சின்னம்சூட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (05.02.2015) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர் திரு.கு.கோடீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சின்னம்சூட்டி கௌரவித்தார்.
இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.