வவுனியாவில் 19 துடுப்பாட்டக் கழகங்களுக்கு காசோலை வழங்கல்!!

336

 
வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுள்ள 19 விளையாட்டுக்கழகங்களுக்கு 30,000 ரூபாய் வீதம் காசோலை வழங்கப்பட்டதோடு துடுப்பாட்ட சங்கத்தின் யாப்பு எல்லோருக்கும் வாசித்து காட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், சட்டத்தரனியும் முல்லைத்தீவு மாவட்ட பதில் நிதிபதியுமான கெங்காதரன், சட்டத்தரனி இளங்குமரன், மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சூர், விளையாட்டுத்துறை மாவட்ட இணைப்பாளர் தனுராஜ், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபர் மரியநாயகம், செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபர் தர்மரட்ணம், விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், துடுப்பாட்ட சங்க தலைவர், செயலாளர், ஏனைய உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_6591 IMG_6613 IMG_6616 IMG_6668 IMG_6675 IMG_6686