வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் கௌரவிப்பு!!

365

 
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கடந்த 2015 ஆம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (07.02.2016) காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, எம்.பி.நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்ததுடன் சிறப்பு விருந்தினராக ஆரம்பக்கல்வி உதவிப்பணிப்பாளர் திரு. எஸ்.கணேசபாதம் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 27 மாணவர்களுக்கும் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

DSC01137 DSC01143 DSC01148 DSC01149 DSC01150 DSC01159 DSC01168 DSC01170 DSC01175 DSC01181