லண்டனை தலைமையாக கொண்ட பாக்கியம் அறக்கட்டளையினால் இன்றைய தினம் வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை கணிஷ்ட உயர்தரம் பாடசாலையில் தாய் தந்தையரை இழந்த வறுமைக் கோட்டிற்கு உற்பட்ட சுமார் 50 மாணவர்களுக்கு பெருமதிமிக்க பாடசாலை புத்தகப்பைகள் வழங்கபட்டன.
இந்நிகழ்வில் பாக்கியம் அறகட்டளையின் ஸ்தாபகர்களான ந.பாலசசுந்தரம் மற்றும் திருமதி.லோகேஸ்வரன் மற்றும் செல்வி தனுஸ்டிகா, சகோதரிகள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் கூமாங்குளம் அஸ்திரம் மக்கள் நற்பணிமன்ற தலைவர் S.ப சுதர்சன் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஏனைய அஸ்திரம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை லண்டனை சேர்ந்த The Compassison அமைப்பு மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.