வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்புகள் ஆரம்பம்!!

1025

 

அரச உத்தியோகத்தர்களுக்கான ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்பு இன்று02.03.2016 புதன்கிழமை  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க. பரந்தாமன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே. ஆயாகுலன், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பா. நாகேஸ்வரபாலா, வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி. கிருஷ்ணகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இது ஆறு மாதங்கள் கொண்ட பயிற்சி வகுப்பு ஆகும். இப்பயிற்சி நெறியின் ஊடாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஆங்கில பேச்சுதிறன், மொழித்திறன், எழுத்துதிறன் என்பன விருத்தி அடையும் என்பது எதிர்பார்ப்பு ஆகும். இப்பயிற்சி நெறி பிரபல ஆங்கில ஆசிரியர் திரு எஸ். தில்லைமோகன் அவர்களால் நடாத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

10301190_465903436932686_2838145773808036973_n 10314018_465903630266000_1494720043392133223_n 12376295_465903500266013_467019778881477454_n 12376781_465903076932722_555372914581378056_n 12790918_465903250266038_2639479007102827461_n 12794611_465903816932648_7094505119574524968_n 12805928_465903306932699_7386331658080259816_n 12806194_465902933599403_4066778714017078605_n 12809652_465903356932694_4359982717831107624_n 12814307_465903410266022_4660349719532661224_n 12814767_465903150266048_2007824469805162688_n