வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாளான 22.03.2016 செவ்வாய்கிழமை ரதோற்சவம் இடம்பெற்றது .
காலைமுதல் அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் கருமாரி அம்பாள் ரதமேறி திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து பச்சை சாத்தல் , பிராயசித்த அபிசேகம் என்பன இடம்பெற்று மாலையில் தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது .