இலங்கை – தென்னாபிரிக்க போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழ்வர் கைது!!

238

SA

கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழ்வர் இந்தியாவின் ஹைதராபாத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது, இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேகநபர்கள் வசமிருந்து 11 இலட்சத்து 12,500 இந்திய ரூபாய்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைதானவர்களில் பொறியியல் மாணவர்கள் இருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தின் குஷய்குடா நகரிலுள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் வைத்து அந்த நாட்டு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே, இவர்கள் சிக்கியுள்ளனர்.

அத்துடன், இதனுடன் தொடர்புடைய ஏனையவர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.