வவுனியா ஒமந்தையில் இன்று (30.03.2016) சற்றுமுன் டிப்பர் மீது வான் மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து சென்ற டிப்பர் வாகனம் பாதையில் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட போது வவுனியாவிருந்து பயணித்த வான் டிப்பர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை ஒமந்தை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.