வவுனியாவில் வீட்டிற்காக பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

296


 
மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீடுகளுக்கான விண்ணப்பப்படிவத்தை கையளிப்பதற்காக வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளரின் கையொப்பத்தை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று(30.03.2016) காலையில் இருந்தே முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பிரதேச செயலகம் மக்கள் கூட்டத்தினால் நிறைந்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் விண்ணப்பப்படிவத்தில் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரிடம் கையொப்பத்தை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தினமும் வவுனியா பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு அதிகளவான மக்கள் செல்கின்றனர்.



இதன்காரணமாக மக்களைக் கட்டுப்படுத்த முடியாத அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் விண்ணப்பத் திகதி முடிவடையவுள்ளதனால் மக்களின் நலன்கருதி கடமையை செய்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

– சங்கீதன்-



12895454_1233116673384721_1266890690_n 12910068_1233116350051420_1973898518_n 12910509_1233154966714225_959629536_n 12910565_1233116600051395_1605613651_n 12910616_1233154893380899_986850589_n 12920909_1233155046714217_145931582_n 12921086_1233155030047552_862542272_n 12935376_1233116566718065_1442242416_n