சிறுமி மீது பாலியல் குற்றம் : ஆசிரியருக்கு விளக்க மறியல்!!

282


Abuse

50 வய­து­டைய வகுப்­பா­சி­ரியர் 10 வயது மாண­வியை கணனி அறைக்கு அழைத்து பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்து கம்­பளை நீதி­மன்ற நீதிவான் சாந்­தனி மீகொட வகுப்பா­சி­ரி­யரை எதிர்­வரும் 7 ஆம் திக­தி­வரை விளக்கமறி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.



இச் சம்­பவம் கம்­பளை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள மகா­வித்­தி­யாலயம் ஒன்­றி­லேயே நிகழ்ந்துள்ளது.

தமது வகுப்பில் கல்வி பயிலும் 10 வயது சிறுமி ஒரு­வரை வகுப்­பா­சி­ரியர் அழைத்து “உனது சகோதரர் குற்றம் புரிந்­துள்ளார். அது தொடர்­பாக உன்­னிடம் விளக்­க­மாகக் கூறு­கின்றேன். கணனி அறைக்குள் போ” என தெரி­வித்­துள்ளார். சிறுமி அங்கு சென்­றதும் ஆங்­கிலப் பாடத்­திற்குப் பொறுப்பான வகுப்­பா­சி­ரியர் அவ்­வ­றைக்குள் சென்று சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்­துள்ளார்.



வகுப்­பா­சி­ரி­யரின் இச் செயல்­கு­றித்து சிறுமி பெற்­றோ­ரிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்து பெற்றோர் பொலிஸ் நிலை­யத்தில் முறை­ப்பாடு செய்­துள்­ளனர். பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் ஆசிரியரைக் கைது செய்து நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்த போதே நீதிவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட் டார்.