வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் உபகரணக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் திருமதி எம்.ஏ.மோகன் தலைமையில் இன்று (29.04.2016) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி கந்தையா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை பொறியியலாளர் திரு.எஸ்.சிவகுமாரன், வவுனியா தெற்கு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.கணேசபாதம், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் திரு.றோய் ஜெயக்குமார், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.அ.குணசீலன், இவர்களுடன் பாடசாலை சமுகத்தினர், பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி சிறப்பித்தனர்.