வவுனியாவில் கமநல வங்கியின் ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இன்று (30.04.2016) நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ரி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர்), சிறப்பு விருந்தினர்களாக எஸ்.குமாரதேவன் ( பொறியியலாளர், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம்), என்.நவநேசன் (பொறியியலாளர், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம்), கௌரவ விருந்தினர்களாக ரீ.யோகேஸ்வரன் (பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்- விரிவாக்கம்), ப.சத்தியசீலன் (பிரதி விவசாயப் பணிப்பாளர்- விதைகள்), மற்றும் பொதுமக்கள், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், பணிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல் என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.