வன்னி சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, தொழிலாளர்கள் விவசாயிகள் வாழ்வுரிமைக்கட்சி, அங்காடிகள் வியாபாரிகள் சங்கம், சிறு தொழிலாளர்கள், ஆகியோர் இணைந்து நடாத்திய மே தின நிகழ்வுகள் இன்று(01.05.2016) வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மத்திய பேரூந்து தரிப்பிடம் ஊடாக மணிக்கூட்டுக் கோபுர வழியாக பஸார் வீதி சென்று அங்கிருந்து நீதிமன்றம் வழியாக வவுனியா நகரசபை மண்டபத்தினை வந்தடைந்தது,
தொடர்ந்து பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இம் மேதினப் பேரணியிலும் கூட்டத்திலும் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.