தண்ணீர் அருந்தினால் அபராதம் : வினோத சட்டம்!!

271


Water

அமெரிக்காவில் அமைந்துள்ள Ibiza தீவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பொது இடத்தில் வைத்து தண்ணீர் அருந்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.



San Antonio நகரில்அமைந்துள்ளது Ibiza தீவு, மனதிற்கு மிகவும் அமைதி தரும் தீவு என்பதால், இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர்.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள்,பொது இடங்களில் வைத்து மது அருந்திவிட்டு பிரச்சனைகளில் ஈடுபடுவதாக அதிகமான புகார்கள் பொலிசாருக்கு வந்துள்ளது.



ஆனால் கையில் பாட்டில்களை வைத்து குடிப்பதால் அவர்கள் மது அருந்துகிறார்களா அல்லது தண்ணீர் அருந்துகிறார்களா என்று கண்டுபிடிப்பதில் பொலிசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை நிர்வாகம், பொது இடங்களில் வைத்து மது, குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர்கூட அருந்த கூடாது என அறிவித்துள்ளது, அதனை மீறி அருந்தினால் $850 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


ஆனால், கோடைகாலங்களில் இந்த தீவு அதிக வெப்பம் மிகுதியாக இருக்கும், இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர், எனவே இந்த சட்ட அமலாக்கம் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் கட்சி கவுன்சிலர் ஜோஸ் சாலா கூறியுள்ளார்.