வவுனியாவில் இடித்தாக்குதல் : தென்னைமரம் எரிந்து நாசம்!

339

Vav

வவுனியா உக்குளாங்குளத்தில் நேற்று (01.05.2016) மாலை இடித்தாக்குதலில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் கடந்த சில வாரங்களாக மக்களை வாட்டி வதைத்த வெப்பத்தினை தணிக்க நேற்றைய தினம் பலத்த மின்னலுடன் மழை பெய்தது.

இந்த சமயத்தில் உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே காணப்படும் நெளுக்குளம் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையின் காணியில் நின்ற தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.