நாடு முழுவதும் இன்று இடியுடன் கூடிய மழை : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

456

Raining

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இடி மின்னல் தாக்குதல்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்கள உயர் அதிகாரி நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான காற்றும் வீசக்கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இடி மின்னல் தாக்குதல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வரையறுக்க மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பத்துடன் கூடிய காலநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் எனவும் மழை ஆரம்பித்தவுடன் வெப்பநிலை கிரமமாக குறைவடையும் எனவும் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.