வவுனியா பொது நூலகத்தில் தனி அறையில் இரவு முழுவதும் தங்கியிருந்த நபரைத் தேடும் பொலிசார்!!

649

 
வவுனியா பொது நூலகத்தில் நபர் ஒருவர் தனி அறையில் இரவு முழுவதும் இருந்ததுடன் சில பொருட்களையும் களவாடிச் செல்ல முயற்சி செய்திருக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இரவு பொது நூலகம் மூடப்படும் போது உள்ளே மறைந்திருந்து, இரவு முழுவதும் அறையொன்றில் தங்கிருந்த நபர் காலை நூலகம் திறந்த பின்னர் தப்பிச்சென்றிருக்கலாம் என நூலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

நபர் தங்கியிருந்த அறையின் திறப்பு பொது நூலகத்தின் நிர்வாகியிடம் இருக்கவில்லையென விடயம் அறிந்த சிலர் தெரிவித்துள்ளனர். நபர் தங்கிருந்த அறையின் திறப்பு எவ்வாறு தங்கியிருந்த நபரிடம் சென்றது என பொலிசார் கேள்வியெழுப்பிய போதும் வவுனியா நகரசபையின் உயர் அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வவுனியா பொது நூலகத்தின் கண்காணிப்புக் கமராக்கள் கடந்த சில மாதங்களாக செயலிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று காலை பொது நூலகம் திறந்த பின்னர் தப்பிச் சென்ற குறித்த நபர் பல நாட்களாக குறித்த அறையில் தங்கியிருந்திருக்க கூடுமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் தங்கியிருந்த பொதுநூலகத்தின் அறையில் இருந்து ஆபாச இறுவட்டுகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் அடங்கலான ஆடைகளை பொலிசார் மீட்டுள்ளனர். மேலதிக விசாரனையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

IMG_9206IMG_9205 IMG_9208 IMG_9214 IMG_9221