வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர் மாநாடு, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.செ.அன்ரன் சோமராஜா தலமையில் ஆரம்பமானது.
முதலாவது நிகழ்வான கண்காட்சி காலை 9.00 மணியளவில் வவுனியா சைவப்பிரகாச கல்லூரி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் காண்காட்சியில் தரம்1 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையிலான மாணவர்களின் அனைத்து பாடங்களுக்குமான கற்பித்தல் சாதனங்களும் ஆசிரியர்களால் காட்சிப்படுத்தப்பட்டன .
அதன் இரண்டாவது நிகழ்வான ஆசிரியர் மாநாடு காலை 11.15 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம் மாநாட்டில் வரவேற்பு நடனம், அரங்கு அறிமுகம், ஆய்வுமுன் மொழிவு , பேருரையாளர் அறிமுகம், பேருரை, பிரதம அதிதி உரை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா தலமையில் ஆரம்பான இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி செல்வின் இரேனியஸ் மற்றும் தெற்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், தெற்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்வி.க.கந்தையா, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.க.பாக்கியநாதன் உட்பட தெற்கு வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்விப் பணிமணை நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர்களுக்கான தொழில்சார் வாண்மையை ஏற்ப்படுத்துதல், தொழில்சார் ஊக்கத்தை வழங்குதல், நவீன கற்பித்தல் சாதனங்களின் மூலம் கற்பித்தலை மேம்படுத்துதல், கற்பித்தல் சார் அனுபவங்களை வழங்குதல் போன்றவற்றை நோக்காக கொண்டே இந்த மாநாடு இடம்பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளையதினம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் திருமதி.செ.அன்ரன் சோமராஜா (வலயக்கல்விப் பணிப்பாளர்) தலைமையில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.இ.ரவீந்திரன் (செயலாளர் கல்வி பண்பாட்டு மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் – வடமாகாணம்) கலந்து சிறப்பிக்கவுள்ளார்.