வவுனியாவில் இரண்டுநாட்கள் நடைபெறும் தொழிற்சந்தை!!

833

 
வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சந்தை இன்று(27.05) காலை வவுனியா பல்கலைக்கழகம் பம்பைமடு வளாகத்தில் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதல்வர் வவுனியா வளாகம் கலாநிதி த.மங்களேஸ்வரன், வியாபார கற்கைநெறி பீடாதிபதி கலாநிதி அ.புஸ்பநாதன், பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி சி.குகநேசன், தலைவர் தொழிற்சந்தை ஏற்பாட்டுக்குழு கலாநிதி ர.நகுலன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

இன்று (27.05.2016) அனைத்துப் பட்டதாரிகள் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும் நாளை (28.05.2016) அனைத்து தொழில் வாய்ப்புக்களைத் தேடுபவர்களுக்காகவும் இடம்பெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையும் இத் தொழிற்சந்தை இடம்பெறும்.

DSC04089 DSC04090 DSC04091 DSC04097 DSC04103 DSC04104 DSC04106 DSC04118 DSC04122 DSC04136 DSC04140 DSC04145 DSC04148 DSC04151