வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சந்தை நேற்று காலை வவுனியா பல்கலைக்கழக பம்பைமடு வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நேற்றையதினம் அனைத்துப் பட்டதாரிகள் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்காவும் நடைபெற்றிருந்தது. இன்றைய தினம் (28.05.2016) அனைத்து தொழில் வாய்ப்புக்களைத் தேடுபவர்களுக்காக நடைபெற்றது. இவ் இரண்டு நாட்களிலும் 300 இற்கும் மேற்பட்டவர்கள் சமூகமளித்ததாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இத் தொழிற்சந்தையில் பல தனியார் நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வின் மூலம் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தனர்.
இத் தொழிற்ச்சந்தை தொடர்பாக ஒருவர் கருத்து தெரிவிக்கையில் , இந்த தொழிற்சந்தை பயனுள்ளதாக காணப்பட்டது. புல்வேறு நிறுவனங்கள் வருகைதந்திருந்தன. நான் ஒரு நிறுவனத்தின் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்.