வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி!!

501


new

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நாளை (16.07.2016) காலை 8.00 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது .



வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை வந்தடைந்து அங்கிருந்து A9 வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுரச் சந்திரய அடைந்து பின்னர் பசார் வீதியின் ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தான வீதி ஊடாக இலுப்பையடி,வைத்தியசாலை கடந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அணி புதிய பேருந்து தரிப்பிடத்தின் ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைகிறது .

சமநேரத்தில் பழைய மாணவர்களின் உந்துருளிப் பவனி மன்னார் வீதி ஊடாக குருமண்காடு காளிகோவிலை அடைந்து கோவில் வீதி ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைந்து ஒன்றிணைந்து வீதி ஊடாக பாடசாலையை அடையவுள்ளது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்களுடன் அனைத்துப் பழைய மாணவர்களையும் இம் மாபெரும் நடைபவனியில் ஒன்றிணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.



பாடசாலை நிர்வாகம்