வவுனியா மாணவிக்கு அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் விழாவில் பதக்கம்!!

1661


 
தமிழ் மொழி தின  போட்டியில்  தேசிய ரீதியில்  முதலிடம் பெற்ற  வவுனியாவை சேர்ந்த  கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும்  நேற்று(23.10)   கண்டி தர்மராஜா கல்லூரியில்  கல்வி இராஜாங்க  அமைச்சர் வே .இராதகிருஷ்ணன்  தலைமையில் இடம்பெற்ற  அகில  இலங்கை தமிழ் மொழித்தின விருது  வழங்கும்  நிகழ்வின் போது   வழங்கி வைக்கபட்டது.

கடந்த ஜூலை மாதம்  கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த் தினப்போட்டியில், பிரிவு ஒன்றுக்கான இசையும் அசைவும் போட்டி நிகழ்வில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் செல்வி. கவிநயா அரவிந்தன் முதலிடம் பெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது.



14642465_1413962888615592_6167076990061688652_n 14731150_1413961591949055_251624589817870417_n 14721758_1413961475282400_686914451482345637_n 14708313_1413962978615583_7868762658789128562_n 14650649_1413962138615667_962813156875824206_n