தமிழ் மொழி தின போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும் நேற்று(23.10) கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே .இராதகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் நிகழ்வின் போது வழங்கி வைக்கபட்டது.
கடந்த ஜூலை மாதம் கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த் தினப்போட்டியில், பிரிவு ஒன்றுக்கான இசையும் அசைவும் போட்டி நிகழ்வில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் செல்வி. கவிநயா அரவிந்தன் முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.