வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மாணவர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த 03.11.2016 அன்று இடம்பெற்றது.
மேற்படி பாடசாலையில் 50 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்று 25 மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்ததுடன் ஏனையோர் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்திருந்தனர்.
தேசிய ரீதியில் இந்த பாடசாலை புலமை பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பத்தாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா ,ஓய்வுபெற்ற முன்னாள் வலயகல்வி பணிப்பாளர்கள் திருமதி அன்டன் சோமராஜா மற்றும் திருமதி பராசக்தி ஆகியோர் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் கெளரவித்திருந்தனர்