வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தை ஓய்வுபெற்ற முன்னாள் சைவபிரகாச மகளீர் கல்லூரி அதிபர் உமா இராசையா அவர்கள் ஆலயத்தின் பெயர்பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு அகிலாண்டேஸ்வரி அருளகத்தின் அனுசரணையோடு உருவாக்கபட்ட சரஸ்வதி சிலையினை வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அறங்காவலர் சபையின் செயலாளரான திரு.ஆ. நவரட்ணராஜா திரைநீக்கம் செய்து வைத்தார்.
மேலும் விநாயகர் ஆலயம் மற்றும் சரஸ்வதி சிலை என்பவற்றுக்கான சுற்றுவேலி குகதாசன் குடும்பம் (குகன்மோட்டர்ஸ்) அனுசரணை வழங்கப்பட்டதுடன் அதற்கான பெயர்பலகையினை திரு பொன்னம்பலம் சாந்தகுமார் அவர்களினால் திரைநீக்கம் செய்து வைக்கபட்டது.
மேற்படி நிகழ்வில் பாடசாலையின் புதிய அதிபர் திரு.பூலோகசிங்கம் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.