வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்)

1225


வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016  ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும்  கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தை ஓய்வுபெற்ற முன்னாள் சைவபிரகாச மகளீர் கல்லூரி அதிபர்  உமா இராசையா அவர்கள்  ஆலயத்தின் பெயர்பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு  அகிலாண்டேஸ்வரி அருளகத்தின்  அனுசரணையோடு உருவாக்கபட்ட சரஸ்வதி சிலையினை வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத  அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலின் அறங்காவலர் சபையின் செயலாளரான திரு.ஆ. நவரட்ணராஜா  திரைநீக்கம் செய்து வைத்தார்.



மேலும்  விநாயகர் ஆலயம்  மற்றும் சரஸ்வதி சிலை என்பவற்றுக்கான சுற்றுவேலி குகதாசன் குடும்பம் (குகன்மோட்டர்ஸ்) அனுசரணை வழங்கப்பட்டதுடன் அதற்கான பெயர்பலகையினை திரு பொன்னம்பலம் சாந்தகுமார் அவர்களினால் திரைநீக்கம்  செய்து வைக்கபட்டது.

மேற்படி நிகழ்வில் பாடசாலையின் புதிய அதிபர் திரு.பூலோகசிங்கம்  மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்   வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர்கள்  ஆசிரியர்கள்  மாணவர்கள் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.



dsc_0004 dsc_0007 dsc_0021 dsc_0025 dsc_0030 dsc_0031 dsc_0034 dsc_0046 dsc_0054 dsc_0060 dsc_0062 dsc_0065 dsc_0066 dsc_0070 dsc_0071 dsc_0083 dsc_0084 dsc_0087 dsc_0090 dsc_0092 dsc_0097 dsc_0098 dsc_0099 dsc_0101 dsc_0103 dsc_0106 dsc_0107 dsc_0108 dsc_0112 dsc_0113 dsc_0115 dsc_0116 dsc_0117 dsc_0127 dsc_0129 dsc_0132 dsc_0136 dsc_0144 dsc_0148