வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017

936

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம்  என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்க படவுள்ளது .

24.03.2017  வெள்ளிகிழமை  காலை 6.00 மணிமுதல் ஆரம்பமாகும் பூசை அபிசேகங்கள்  மறுநாள் காலை வரை  நான்கு கால  பூசைகளும்  அதிகாலை 5.30 மணிக்கு  வசந்த மண்டப பூசையும் தீர்த்தோற்சவமும்  இடம்பெறும் .

மேற்படி சிவராத்திரி  நிகழ்வின் ஆலயத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற இம்முறையும் ஒழுங்கு சசெய்யப்படுள்ளது. சிவராத்திரி விரதமிருக்கும் அடியார்கள்  பாற்குடம்  எடுக்கும் அடியார்கள்  நேர காலத்துடன் அலுவலகத்தில் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் .

சிவராத்திரி தினத்தன்று காலை ஒன்பது மணிமுதல் சமய தீட்சை வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் .

அடியார்களின் வசதி கருதி ஆலயத்தினால்  இரவு 6.00 மணிமுதல் அடுத்த நாள் காலை  6.00 மணி முதல் விசேட போக்குவரத்து  வசதிகளும் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .