ஒரே நிமிடத்தில் 145 தேங்காய்களை அடித்து நொறுக்கி சாதனை படைத்த நபர்!!

585


கேரளா மாநிலம் திருச்சூர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 145 தேங்காய்களை வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை செய்துள்ளார்.



திருச்சூர் அருகே பூஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அபிஸ் டோமினிக். இவர் கேரளா போக்குவரத்து துறையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகின்றார்.

சாதனைகள் படைப்பதில் அதீத ஆர்வம் கொண்ட தனது முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் இன்னொரு சாதனை நிகழ்த்த திட்டமிட்டிருந்தார். அதன்படி இவர் தற்போது ஒரு நிமிடத்தில் 145 தேங்காயை உடைத்து சாதனை படைத்துள்ளார்.



திருச்சூரில் உள்ள சோபா சிட்டி மாலில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 145 தேங்காய்களை தன் வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை படைத்துள்ளார்.



இவர் முன்னதாக 124 தேங்காய்களை ஒரு நிமிடத்தில் உடைத்து சாதனை செய்திருந்தார். அதோடு, பேருந்தை கயிறால் கட்டி பல்லால் 50 மீற்றர் தூரம் இழுத்து செல்வது, வேகமாக ஓடும் மின் விசிறியை வெறும் கையால் நிறுத்தியது உள்ளிட்ட சாதனைகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.