முஸ்லிம் நாடான இந்தோனேசியா அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலை ஒன்றை பரிசளித்துள்ளது.
இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சமீபத்தில், அமெரிக்காவுக்கு 16 அடி உயரமுள்ள சரஸ்வதி சிலையை பரிசளித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இந்த சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது. பாலித்தீவைச் சேர்ந்த ஐந்து சிற்பிகள் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.
முறைப்படி இன்னும் இந்த சிலை, திறப்பு விழா நடக்கவில்லை. அதற்குள்ளாக அந்த வழியே செல்பவர்கள் இந்த சிலையை பார்த்து வியக்கின்றனர்.