காபூல் விமான நிலையம் அருகே தாலிபன்கள் அதிரடித் தாக்குதல்

444


afgan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே இருந்த கட்டிமுடிக்கப்படாத- 5 மாடிக் கட்டிடமொன்றை ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.



மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்துள்ளது. குண்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்துள்ளது.
ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் தாலிபன் ஆயுததாரிகளும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி கடுமையான சண்டையில் ஈடுபட்டனர்.



பாதுகாப்புப் படையினர் 5 தாலிபன் ஆயுததாரிகளை இதன்போது சுட்டுக்கொன்றதாக காபூல் காவல்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் இருவர் தம்மைத்தாமே வெடிக்க வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமது தரப்பில் ஆட்சேதங்கள் இல்லையென்றும் ஆப்கன் பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.


சர்வதேச படைகளின் உதவியின்றி ஆப்கன் படைகளே தனியாக இந்தத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காபூலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.