வவுனியாவில் வெடிச் சம்பவத்தில் சிறுவனின் விரல்கள் துண்டிப்பு !!

350


hand

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் நேற்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுளூர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ் வெடி விபத்து ஏற்பட்டதனால் திலக்சன் எனும் 3 வயது சிறுவன் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு வெடிபொருள் தயாரித்தவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியாபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.