மரணஅறிவித்தல் : சின்னக்குட்டி இளந்தளைசிங்கம்!!

676

சின்னக்குட்டி இளந்தளைசிங்கம்

கோகுலன் ஸ்ரோஸ் (இல 19, பஸ்நிலையம், வவுனியா) உரிமையாளர்

காரைநகர் களப்பூமி பொன்னாவளையை பிறப்பிடமாகவும், இல 36A வைரவபுளியங்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கோகுலன் ஸ்ரோஸ் (இல 19 பஸ்நிலையம், வவுனியா) இன் உரிமையாளருமான சின்னக்குட்டி இளந்தளைசிங்கம் அவர்கள் 13.04.2017 அன்று காலமானார்.

அன்னார் சிவபூபதிமலரின் அன்புக்கணவரும், சின்னக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், ஆறுமுகம் அன்னம்மாவின் மருமகனும் கோகுலதாசன், வித்தியா (பொறியிலாளர்), வைகுந்தன் (உரிமையாளர் -கோகுலன் ஸ்ரோஸ்), சுவேந்தன் (பொறியிலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

பொன்னுத்துரை சிவபாலனின் (போதனா வைத்தியசாலை குருநாகல் ) அன்பு மாமனாரும், அமரர்களான செல்லாச்சி, சிவகாமன் தெய்வானை, சுந்தரம்மா, சிவசுப்பிரமணியம், சிவயோகம் மற்றும் திருமதி அன்புபூரணத்தின் அன்புச்சகோதரனும்,

அமர்களான ஆறுமுகம் கந்தையா, காசிப்பிள்ளை கந்தையா, இராசநாயகம் கந்தையா, இராசா கந்தையா, சுப்பிரமணியம் சண்முகலிங்கம் மற்றும் திரு.ஆறுமுகம் சிவபாதசுந்தரலிங்கம், ஆறுமுகம் கனகலிங்கம் (ஆதிவிநாயகர் ஸ்ரோஸ்) ஆண்டி ஜயா அம்பலவி முருகர், திருமதி தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

காலம்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னுத்துரை, திருமதி பொன்னுத்துரை சரஸ்வதியின் சம்பந்தியும், திருமதி சிவதேவி (ஓய்வுநிலை சேவை உத்தியோகத்தர் -வவுனியா வைத்தியசாலை ) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.04 .2017 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று காலை 9.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இல 36A
வைரவபுளியங்குளம்
வவுனியா

தகவல் -குடும்பத்தினர்