மரண அறிவித்தல் : குமாரசிங்கம் பார்வதி!!

562

நெடுங்கரைசேனை செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும் இல.23A , அம்மன் கோவில் வீதி பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் பார்வதி அவர்கள் 19.04.2017 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற யோகாம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தம்பையா குமாரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், சிவயோகநாதன் (கனடா) விமலநாதன், கணேசநாதன், ரகுநாதன், ஜெகநாதன், நாகேஸ்வரன் (ஆசிரியர்- காத்தார் சின்னக்குளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்ற ராஜினி, இந்துமதி (ஆசிரியர், கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம்) , மலர்விழி , சியாமலா (பூவரசங்குளம்  பிரதேச வைத்தியசாலை) கலைவாணி (ஆசிரியர்- பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலினி (கனடா), கலாயினி (கனடா) , டயானா, சுயந்தன், துசாந்தன், துசாந்தினி (யாழ் பல்கலைக்கழகம்), றியாந்தினி (கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட மாணவி) , சுலக்சனா,  ஐங்கரன் (பொது வைத்தியசாலை வவுனியா), சர்மிலா, சோபிதன், சோபிதா, ஜெனுதா, கபிசன், கிருதார்த்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று  காலை 10 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ்வறித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல்
குடும்பத்தினர்